இப்படியும் ஒரு தலைவர்...விளக்கனேந்தல்- ராமையா.


பசுமை நாயகன் www.thagavalthalam


       முதுகுளத்தூர் அருகே விளக்கனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமையா . இவர் 2006 ல் போட்டி இன்றி தேர்ந்தெடுக்க பட்டார். 

2011 ல் போட்டி இருந்தாலும் மக்கள் மீண்டும் இவரையே தேர்ந்தெடுத்தார்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கொடுத்த இலவச வீட்டில் வசித்தார். அதுவும் பழுதடைந்து விட்டாதால் இந்த குடிசையை அமைத்து இதில் மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.

100 நாள் வேலையை நம்பியே உள்ளது குடும்பம். இவர் மனைவி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார் இது தான் குடும்ப வருமானம். வாகனம் எதுவும் இல்லை. நடந்தே தான் செல்கிறார் மக்கள் பணிக்காக..

உட்கார சேர்கூட இல்லை. என்ன ஆச்சரியமாக இருக்கா ? உண்மை . மனசாட்சி உள்ள அரசியல் வாதிகளே உங்கள் மனசாட்சி உறுத்துகிறதா ? 
எப்படி உறுத்தும் ? மனசாட்சி இருந்தால் தானே ?


                                                                                       -பசுமை நாயகன்.