பரமக்குடியில் தி.மு.க கோஷ்டி மோதல்


   ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தி.மு.க.வின் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கார், தங்கும் விடுதி, உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
தி.மு.க. மாவட்டச் செயலாளரும் ஆர்.எஸ். மங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சுப. தங்க வேலன் கோஷ்டிக்கும், ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜெ.கே.ரித்தீஷ் கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி தி.மு.க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்றது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, சுப. தங்க வேலன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
                              -நாகை மகாகிருஷ்ணன்