இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

       கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து 664 படகுளில் சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.  கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்களை கொண்டு மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும், மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும் கடலில் வீசி எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 -பசுமை நாயகன்