தேவர் குருபூஜை பசும்பொன்னில் பலத்தப் பாதுகாப்பு

   தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.  ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, மதிமுக பொதுச்செயலாளர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நேதாஜி சுபாஷின் வலது கரமாக விளங்கிய முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த காலம் தவிர்த்து தாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதாகவும் வைகோ கூறினார்
-இணைய செய்தியாளர்-M.சின்னதுரை