இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

       ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதையொட்டி பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அஞ்சலி செலுத்த வரும் தலைவர்களுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரமக்குடி செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருபவர்கள், குறிப்பிட்ட வழித்தடங்களில் தான் வரவேண்டும் என்றும், வாகனங்களில் மேல் பகுதியில் அமர்ந்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது எனவும், ஆயுதங்கள் எதுவும் எடுத்துவரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனின் நினைவு தினப் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் காவல்துறையினர் பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-தேனி ராஜா