கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை

                    மோசமான வானிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையடுத்து, மீனவர்களை கடலுக்கு அனுமதிக்க வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதனால் மண்டபம், ராமேஸ்வரம் துறைமுகங்களில், மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.
கடலுக்கு மீன்பிடிப்பற்காக வந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், கடல்சீற்றம் காரணமாக, தூத்துக்குடியில் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், பாதியிலேயே கரை திரும்பினர்.
-நாகை மகாகிருஷ்ணன்