கடைகளை அகற்றக் கோரிக்கை : ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

     ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ள கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டி கொடுத்தது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளான காரணத்தால், கடைகளை அகற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

-நாகை மகாகிருஷ்ணன்